முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் பணியாளர்களின் உளநலனை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் எண்ணத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளினையும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பணியாளர்களையும் ஒன்றிணைத்து 04.04.2024 அன்று மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டம், வலைப்பந்து, தேசிக்காய் கரண்டி, நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், மா ஊதி காசு எடுத்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மகிழ்வூட்டும் வகையில் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வாக எமது சபை பணியாளர்களினால் உடற்பயிற்சி நிகழ்வும் வழங்கப்பட்டது.
Category: Events
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல்
பொது போக்குவரத்திற்கு பொது மக்களிற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை ஒட்டுசுட்டான் நகரை அண்டிய பகுதிகளிலும் புதுக்குடியிருப்பின் திப்பிலி சந்தி தொடக்கம் மந்துவில் சந்தி வரை மேற்கொள்ளப்பட்டு சபைக்கு கொண்டுவரப்பட்ட கால்நடைகள் ஒட்டுசுட்டான் உப அலுவலகத்திலும் புதுக்குடியிருப்பு உப அலுவலகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தண்டப்பணத்தினை சபைக்கு செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி எமது மக்களின் நலனிற்கு பங்களிப்பு நல்குவோம்.
இணையத்தள அங்குரார்ப்பணம்
வீதி நிர்மாணம்
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல்
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கடந்த மார்கழி மற்றும் தை மாதங்களில் மேற்கொள்ளப்பட்டும் மீளவும் சமூக அக்கறை இன்றி புதுக்குடியிருப்பு நகர் பகுதி மற்றும் கோம்பாவில் பகுதிகளில் உரிமையாளர்களினால் பராமரிக்கப்படாது கட்டாக்காலிகளாக வீதிகளில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட கால்நடைகள் இன்று (20.02.2024) சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வீதிகளுக்கு ஒளியூட்டுதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முன்னைநாள் தவிசாளர் அ.தவக்குமாரன் அவர்களின் 2023 ஆண்டு பாதீட்டு ஒதுக்கத்தில் கோம்பாவில் கிராமசேவகர் பிரிவில் வதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கடந்த 10.01.2024 அன்று செயலாளர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாற்பது மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5000/- பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது
வாசிப்பு மாத போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கல்
வாசிப்பு மாதத்தையொட்டி பாடசாலைகளில் நடாத்தப்பெற்ற போட்டிகளிலும் பொதுமக்களிடையே நடாத்தப்பெற்ற வீட்டு நூலக போட்டிகளிலும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்விலிருந்து சில பதிவுகள். குறித்த நாளில் புதுக்குடியிருப்பு அறிவொளி புத்தகசாலை உரிமையாளரால் பிரதேசசபையின் நூலகங்களுக்கென ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டது. அவருக்கு பிரதேசசபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.