புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முன்னைநாள் தவிசாளர் அ.தவக்குமாரன் அவர்களின் 2023 ஆண்டு பாதீட்டு ஒதுக்கத்தில் கோம்பாவில் கிராமசேவகர் பிரிவில் வதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கடந்த 10.01.2024 அன்று செயலாளர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாற்பது மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5000/- பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது