முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் பணியாளர்களின் உளநலனை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் எண்ணத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளினையும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பணியாளர்களையும் ஒன்றிணைத்து 04.04.2024 அன்று மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டம், வலைப்பந்து, தேசிக்காய் கரண்டி, நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், மா ஊதி காசு எடுத்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மகிழ்வூட்டும் வகையில் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வாக எமது சபை பணியாளர்களினால் உடற்பயிற்சி நிகழ்வும் வழங்கப்பட்டது.