பொது போக்குவரத்திற்கு பொது மக்களிற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை ஒட்டுசுட்டான் நகரை அண்டிய பகுதிகளிலும் புதுக்குடியிருப்பின் திப்பிலி சந்தி தொடக்கம் மந்துவில் சந்தி வரை மேற்கொள்ளப்பட்டு சபைக்கு கொண்டுவரப்பட்ட கால்நடைகள் ஒட்டுசுட்டான் உப அலுவலகத்திலும் புதுக்குடியிருப்பு உப அலுவலகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தண்டப்பணத்தினை சபைக்கு செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி எமது மக்களின் நலனிற்கு பங்களிப்பு நல்குவோம்.